தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் –  ஈரான்

தேசிய பாதுகாப்புச் சபை தலைவரின் உயிரிழப்புக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் – ஈரான்

ஈரானிய தேசிய பாதுகாப்பு சபைத் தலைவர்  அலி லாரிஜானி (Ali Larijani) வான்வழித் தாக்குதலில் கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்த நிலையில் அவரது உயிரிழப்பை ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு சபை உத்தியோப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

லாரிஜானியுடன் அவரது மகனும் பாதுகாப்பு பணியாளர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் இராணுவத் தளபதி அமீர் ஹடாமி (Amir Hatami) எச்சரித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை எதிரிகளை அழிக்கும் முயற்சியின் பகுதி என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) தெரிவித்துள்ளார்.

இதேவேளைபசிஜ் துணை ராணுவத் தளபதி கோலம்ரெசா சோலிமானி (Gholamreza Soleimani) உட்பட பலர் வேறு தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), ஈரான் தலைமைக்கு எதிராகக் கருத்து தெரிவித்து, இந்தச் சம்பவத்தை வரவேற்றார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) உத்தரவுக்கமைய, ஈரானின் மூத்த அதிகாரிகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் தொடர்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான்–இஸ்ரேல் மோதல் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் ஹார்மூஸ் நீரிணை பகுதி இன்னும் பதற்றத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )