
கோட்டாபய சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விவாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையானார்.
சுமார் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணையொன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
