சேருநுவராவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

சேருநுவராவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள மஹிந்தபுர சந்தியில் வைத்து பஸ்வண்டி விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (25) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்தி திருகோணமலைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேரூந்தே இவ் அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த ஒன்பது பேர் மூதூர் தள வைத்தியசாலையிலும் ஐந்து பேர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )