பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்

பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்

மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (24) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையிட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், “அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ஆனால், வாராந்திர நடவடிக்கைகள் இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை. இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். ” என அவர் கூறியுள்ளார்.

Share This