ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது

பிலியந்தல போகுந்தர பகுதியில் இரண்டு கிலோகிராம் ஹெராயின் கையிருப்புடன் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொரட்டுவ பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய சோதனையின் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு தசம் 106 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 478 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், போதைப் பொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் மறைந்திருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான “களுபோவில அவிஷ்க”வின் முக்கிய உதவியாளரான “களுபோவில சுட்டி” மற்றும் அவரது மூத்த சகோதரர் கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளனர்.
24 மற்றும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.