ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதரவு

ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய பிரதமர்  நரேந்திர மோடி  ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காசா போர் நிறுத்த திட்​டத்​துக்கு இந்திய நரேந்திர பிரதமர் மோடி முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்​டோபர் முதல் இஸ்​ரேல் இராணுவத்​துக்​கும் காசா பகு​தியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகளுக்​கும் இடையே போர் நடை​பெற்று வரு​கிறது.

இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அமைதி திட்​டத்தை அறி​வித்​தார்.

‘‘தீ​விர​வாதம் இல்​லாத அமைதி மண்​டல​மாக காசா மாற்​றப்​படும். ஹமாஸ் பிடி​யில் உள்ள இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் உடனடியாக விடு​தலை செய்​யப்பட வேண்​டும்.

உயி​ரிழந்த இஸ்​ரேலியர்​களின் உடல்​களை ஒப்​படைக்க வேண்​டும். காசா​வில் இருந்து இஸ்​ரேல் இராணுவம் படிப்​படி​யாக வெளி​யேறும்.

பலஸ்​தீனர்​களை கொண்ட குழு​வின் தலை​மை​யில் காசா இடைக்​கால நிர்​வாகம் அமைக்​கப்​படும்.

இதில் ஹமாஸுக்கு இடம் அளிக்​கப்​ப​டாது’’ என்று ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.

ட்ரம்​பின் போர் நிறுத்த திட்​டத்​துக்கு இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு அனுமதி அளித்​துள்​ளார்.

இதுதொடர்பில் ட்ரம்ப்நிருபர்​களிடம் நேற்று கூறும்​போது, “அமெரிக்​கா​வின் அமைதி திட்​டத்தை ஹமாஸ் ஏற்​றுக் கொள்ள வேண்​டும்.

ஆயுதங்​களை கைவிட வேண்​டும். இல்​லை​யெனில் இஸ்​ரேல் இராணுவ நடவடிக்​கை​யில் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் முழு​மை​யாக அழிக்​கப்​படு​வார்​கள்.

இதற்கு அமெரிக்கா முழு ஆதரவு அளிக்​கும்” என்று எச்சரித்துள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் தெரிவித்திருப்பதாவது,

காசா போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​மொழிந்​துள்ள அமைதி திட்​டத்தை நாங்​கள் முழு​மனதுடன் வரவேற்​கிறோம், ஆதரிக்​கிறோம்.

இந்த ​திட்​டம் பலஸ்​தீனம், இஸ்​ரேல் மற்​றும் மேற்​காசிய பிராந்​தி​யத்​தில் நீடித்த அமை​திக்கு வழி​வகுக்​கும். காசா மோதலை முடிவுக்கு கொண்டு வரவும், அமை​தியை  ஏற்படுத்தவும் ட்ரம்ப் எடுக்​கும் முயற்​சிகளுக்கு அனைத்து தரப்​பினரும் ஆதரவளிப்​பார்​கள்​” என தெரிவித்துள்ளார்.

Share This