மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் காயம்

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் விபத்து – 11 பேர் காயம்

மஹியங்கனை – கிராதுருக்கோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொரபோர வௌ முதலாம் தூண் பகுதியில் யாத்திரீகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் மஹியங்கனைமற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை பகுதியைச் சேர்ந்த இவர்கள் அனுராதபுரத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This