இந்திய மீனவர்களுக்கு நாளை வரை விளக்கமறியல்

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 07 இராமேஸ்வரம் மீனவர்களும் நளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் அவர்கள் இன்று புதன்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே அவர்களை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடந்த மாதம் 13 ஆம் திகதி நெடுந்தீவு அருகே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.