ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சி பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயிலில் மதவாச்சி, யாகவேவ ரயில் பாதுகாப்பு வாயில் அருகில் மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் யாகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய மதவாச்சியை சேர்ந்த ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் ரயில்வே கேட்டில் தற்காலிக காவலாளியாக கடமையாற்றிய நிலையில் விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.