இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து லண்டனில் போராட்டம்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்வதனை கண்டித்து ஈழத்தமிழ் இன அழிப்பு நாளான கறுப்பு யூலைக்கு எதிராக பிரித்தானியா வாழ் மக்களால் பாரிய போராட்டம் ஒன்று நேற்றையதினம் பிரித்தானியாவில் இடம்பெற்றிருந்தது.

இலங்கை அரசினால் 1993 ஆம் ஆண்டு யூலை மாதம் 10 நாட்களுக்குள் இடம்பெற்ற 3000 அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதோடு 150,000 மேற்பட்ட தமிழ் மக்களின் சொத்துக்கள் இழக்கப்பட்ட கறுப்பு யூலைக்கு எதிராக லண்டனில் உள்ள Parliment square,sw1p 3jx இல் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்பு ரீதியான இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெறுகின்றதுஎன்ற தொனிப்பொருளோடு லண்டன் தமிழீழத்தின் சுயநிர்ணய இயக்கம் [MSDTE], தமிழீழ சுயநிர்ணய அமைப்பு மற்றும் ஏனைய தமிழ் அமைப்பின் ஏற்பாட்டில் பல நூற்றுக்கணக்கான மக்களின் பங்கெடுப்புடன் கறுப்பு யூலைக்கெதிரான போராட்டம் இடம்பெற்றிருந்தது.

Share This