லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவுக்கு விளக்கமறியல்

தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர் அசோக சேபாலவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட அவர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மன்றில் கோரினர்.
அசோக சேபால சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமிந்த அதுகோரல, தனது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.
இதனைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
முறையான குத்தகை நடைமுறையை கடைப்பிடிக்கத் தவறியதால் அரசாங்கத்திற்கு 2.38 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியதாக
அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.