கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி

கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் பதவி விலகினார்.  அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார்.

உள்நாட்டு அரசியல் பிரச்சினை, ட்ரம்ப் வரி விதிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவி விலகினார்.

இதனைத் தொடர்ந்து மார்க் கார்னி கடந்த மாதம் 14 ஆம் திகதி கனடாவின் 24 ஆவது பிரதமராக பதவியேற்றார்.

கனடா நாடாளுமன்றத்தின் பதவிகாலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார்.

இதற்கமைய ஏப்ரல் 28 ஆம் திகதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார்.

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் ஆளும் லிபரல் கட்சி 164 இடங்களில் முன்னணியில் இருக்கும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சியினர் 147 இடங்களில் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கனடா செய்து நிறுவனமொன்று அறிவித்துள்ளது.

எனினும், தனி பெரும்பான்மையுடன் அக்கட்சி அரசு அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.

.

 

 

Share This