மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட சஜித்

மகா சிவராத்திரியை முன்னிட்டு, கொழும்பு 06 இல் அமைந்துள்ள மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பங்கேற்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்த அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிவபெருமானுக்காக நடைபெற்ற இந்து சமய வழிபாடுகளில் கலந்து கொண்டு ஆசியும் பெற்றுக்கொண்டார்.