டயானாவுக்குப் பிடியாணை
![டயானாவுக்குப் பிடியாணை டயானாவுக்குப் பிடியாணை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/dayana.jpg)
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்குப் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டயானா கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பான
வழக்கு விசாரணை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (06.02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பிரதிவாதியான டயானகமகே நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய நிலையில் , கொழும்பு தலைமை நீதவான்
தனுஜா லக்மாலி, அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு (06) பிடியாணைப் பிறப்பித்தார்.