மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

மறுஅறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை நாளை பிற்பகல் 02.30 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மறுஅறிவித்தல் வரை இந்தக் கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

CATEGORIES
TAGS
Share This