குருநாகலில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழப்பு

குருநாகல்,கல்கமுவ – பாளுகடவல வாவியில் நீரில் மூழ்கி சிறுமிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உறவினர் வீட்டிற்குச் சென்று, வாவியில் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி- மீரிகம பகுதியைச் சேர்ந்த 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.