படலந்த ஆணைக்குழு அறிக்கை இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

‘படலந்த ஆணைக்குழு அறிக்கையை’ இவ்வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.