டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் ஜனவரி மாத இறுதிக்குள் சுமார் 5000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதே மாதத்தில் 02 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாத இறுதிக்குள் 16 அதிக டெங்கு ஆபத்துள்ள வலயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்,

இதன்படி, கம்பஹா மாவட்டத்தில் 764 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 674 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதுடன் காலி மாவட்டத்தில் 315 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 303 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 278 டெங்கு நோயாளர்களும், யாழ் மாவட்டத்தில் 201 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

 

Share This