டான் பிரியசாத் சுட்டுக்கொலை – முக்கிய சந்தேகநபர் கைது

டான் பிரியசாத் சுட்டுக்கொலை – முக்கிய சந்தேகநபர் கைது

டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

“நவ சிங்களே தேசிய இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளரும் அரசியல் ஆர்வலருமான டான் பிரியசாத் செவ்வாய்க்கிழமை (22) மாலை வெல்லம்பிட்டியில் உள்ள ‘லக்சந்த செவன’ வீட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தகவல்களின்படி, அவர் முதலில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

பிரியசாத் மீது நான்கு முறை சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது, மார்பில் இரண்டு முறையும் தோளில் இரண்டு முறையும் சுடப்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவத்தின் போது சிறிய காயங்களுக்கு ஆளான மற்றொரு நபரும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், துப்பாக்கிச் சூடுகளை நடத்தி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This