மன்னாரில் வருடாந்த மடு திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் பங்கேற்பு

மன்னாரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நடைபெற்று வருகிறது.
இதன்படி, இன்று (15) காலை 6.15 மணிக்கு ஆசீர்வாத ஆராதனை ஆரம்பமாகியது
இதில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் மடு கோவிலில் குவிந்துள்ளனர்.
பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் மற்றும் உணவு வசதிகளை இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படை வீரர்கள் வழங்குகிறார்கள்.