Tag: Tamil

மலையக மக்களின் தேவைகளுக்கும் ,முயற்சிகளுக்கும் கைகொடுப்போம் – ஜீவன் தொண்டமான்

admin- January 1, 2025

புத்தாண்டை முன்னிட்டு இ.தொ.கா. பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும். முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் ... Read More

ஹப்புத்தளையில் வேனொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலி – மேலும் 14 பேர் காயம்

admin- December 31, 2024

ஹப்புத்தளையில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஹப்புத்தளை - பெரகல வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த வேன் 16 பயணிகளுடன் பணித்த நிலையில் மேலும் ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

admin- December 31, 2024

ஆண்டு அடிப்படையில் , கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்பட்ட பணவீக்கத்தின் வீதம் அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 ... Read More

இன்றைய நாணயமாற்று வீதம்

admin- December 31, 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்று திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டொலர் ஒன்றின் ... Read More

அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லை – நலிந்த

admin- December 31, 2024

அரசாங்க உத்தியோகத்தர்களை குறைப்பது தொடர்பிலான எதிர்பார்ப்பு இல்லையென சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் ... Read More

மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்துள்ளது – அமைச்சர் நலிந்த

admin- December 30, 2024

பதவியேற்று மூன்று மாதங்களுக்குள் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக இன்று திங்கட்கிழமை பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு ... Read More

காட்டு யானைகளின் பிரச்சினைக்குத் தீர்வு கோரி போராட்டம்

admin- December 30, 2024

அனுராதபுரத்தில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழையும் பிரச்சினைக்கு தீர்வுக் கோரி  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தந்திரிமலை பிரதான வீதியின் ஓயாமடுவ பகுதியில் இன்று திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யானைகளால் பயிர்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக போராட்டக்காரர்கள் ... Read More

சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகள் ஜனவரியில் வழங்கப்படும்

admin- December 30, 2024

வெள்ளம்,வறட்சி மற்றும் காட்டு யானைகளினால் சிறுபோகத்தில் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளை எதிர்வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் திகதிக்கு முன்னர் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது. கடந்த ... Read More

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

admin- December 30, 2024

மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More

2025 ஆம் ஆண்டு பாடசாலைகள் நடைபெறும் நாட்கள் குறைப்பு

admin- December 29, 2024

வருடத்தில் 210 நாட்கள் பாடசாலை நாட்களாக காணப்பட்ட நிலையில் 2025 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களை 181 நாட்களாக குறைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதிகளவிலான பொது விடுமுறைகள் மற்றும் பாடசாலைகளின் முதலாம் தவணை ... Read More

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் எட்டாயிரத்திற்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

admin- December 29, 2024

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைக்கமைய கடந்த 23 ஆம் திகதி முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் போக்குவரத்து விதிமீறல்கள் ... Read More

142 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் கைதான பெண்

admin- December 29, 2024

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 142 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கானாவிலிருந்து தென்னாபிரிக்க கடவுச்சீட்டுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29.12) அதிகாலை கட்டார் எயார்வைஸ் விமானத்தில்​ அந்த பெண் ... Read More