Tag: news

சமூக ஊடகங்களில் பகிரப்படும் ஸ்ரீ தலதா வழிபாட்டு புகைப்படம் தொடர்பில் விசாரணை

admin- April 20, 2025

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்று வரும் ஸ்ரீ தலதா வழிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. புகைப்படம் எடுக்கப்பட்டதாக அல்லது இது ... Read More

ஏப்ரல் மாதத்தின் முதல் இரு வாரங்களில், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை அண்மித்தது

admin- April 20, 2025

ஏப்ரல் மாதத்தின் முதல் பதினைந்து நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 90,000 ஐ கடந்துள்ளது. இதன்படி, இதுவரை 93,915 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி ... Read More

டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம்

admin- April 20, 2025

நாட்டின் பல பகுதிகளில்பெய்து வரும் மழை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்குன்யா பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். டெங்குவை பரப்பும் நுளம்புகள் மூலமாகவும் சிக்கன்குன்யா பரவுவதாக இலங்கை பொது சுகாதார ... Read More

ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

admin- April 20, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்ளைகளுக்கு எதிராக அமெரிக்காவில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வோஷிங்டன் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள பிற நகரங்களில் நேற்று சனிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நாடுகடத்தல், அரசாங்க துப்பாக்கிச் ... Read More

கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் விசேடப் பாதுகாப்பு

admin- April 20, 2025

உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது ... Read More

வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

admin- April 20, 2025

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மனித உடலில் உணரக்கூடிய வெப்பநிலை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ... Read More

கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது – பிரதமர்

admin- April 20, 2025

முன்னைய அரசாங்கங்களில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் சிறிய அளவு மட்டுமே கிராமத்தை வந்தடைந்தது. அவை இடையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் சட்டைப் பைகளுக்குள் சென்றன. அதனால்தான் கிராமங்கள் முறையாக அபிவிருத்தியடையவில்லை என பிரதமர் ... Read More

தேயிலை ஏற்றிச் சென்ற வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயம்

admin- April 19, 2025

தேயிலை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். ஹட்டன்- பொகவந்தலாவ பிரதான வீதியிலுள்ள நோர்வூட் சென் ஜோண்டிலரி பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல்  இந்த விபத்து ... Read More

ஒருகொடவத்தையில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை பலி

admin- April 19, 2025

கொழும்பு - கிரேன்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தந்தை உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. தந்தைக்கும், மகனிற்குமிடையில் ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இரும்பு கம்பியினால் ... Read More

உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு ஜனாதிபதி முற்றுப்புள்ளி

admin- April 19, 2025

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து பெரும் பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து அனைவரின் கவலைக்கும் அவர் பதிலளித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் இல்லாத ... Read More

தொழிற்றுறையை ஊக்குவிக்கப்பதற்காக 05 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தமிழக முதல்வர்

admin- April 19, 2025

இந்தியாவின் தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்கும் 05 முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். சென்னை குன்றத்தூரில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இதன்படி, முதல் ... Read More

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் பலி

admin- April 19, 2025

திருகோணமலை - ஹொரவ்பொத்தானவில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை தனது வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே அந்த நபர் யானை தாக்குதலுக்கு உள்ளானார். குறித்த நபர் 44 வயதுடையவர் என ... Read More