தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஸ்டாலின் ஜெயசங்கருக்கு கடிதம்

தமிழக கடற்றொழிலாளர்களையும் , அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 07 கடற்றொழிலாளர்கள் , இலங்கைக் கடற்படையினரால் மன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களின் படகொன்றும் பறிமுதல் வெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This