உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்த மொட்டுக்கட்சி

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கிராம மட்டத்திலிருந்தான பிரசார நடவடிக்கைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகிறது.

இதன்படி  பிரசார நடவடிக்கைகள் அனுராதபுரம், ஜெய ஸ்ரீ மகா போதியாவிற்கு அருகில் மத அனுஷ்டானங்களுடன் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து உத்தியோகப்பூர்வ தொடக்க விழா நடைபெறும்.

தொடக்க விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம், தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு “நாமலுடன் கிராமம் கிராமமாக” என்று பெயரிடப்பட்டுள்ளதாக  பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் முதல் பொது நிகழ்வு பிற்பகல் 02 மணிக்கு நொச்சியாகமவில் நடைபெற உள்ளது, அங்கு தற்போதைய அரசியல் நிலைமை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் குறித்து விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும் என கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த அறிமுக விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட 14,000 கிராமங்களுக்கு இந்த திட்டத்தை விரிவுபடுத்த பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது.

Share This