விரைவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது – சிங்கள ஊடகம் தகவல்

விரைவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது – சிங்கள ஊடகம் தகவல்

ஆறு முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவை இந்த விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குருநாகல், கண்டி, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவர்களில் சிலர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This