ரணில் மீண்டும் டில்லி பயணம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
ஒரு வாரகாலம் இந்தியாவில் தங்கியிருந்து முக்கியத்துவமிக்க சந்திப்புகளில் அவர் ஈடுபடவுள்ளார் எனவும் அறியமுடிகின்றது.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதியும் ரணில் டில்லிக்குச் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.