பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்றிரவு 11 மணி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Share This