ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடு திரும்பினார்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக இருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.