யாழில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

யாழில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இன்று காலை ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – சோமசுந்தரம் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் காலை 6.50 மணியளவில் பயணித்த யாழ் தேவி புகையிரதத்தில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்தார்.

நல்லூர் பகுதியை சேர்ந்த விஜயரத்னம் மோகன்தாஸ் என்ற 42 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

இறப்பு சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக யாழ்ப்பாணம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This