டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கவலை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் டெங்கு பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், அப்பகுதியில் உள்ள பல சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் (MOH) தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு பாதிப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.
இந்நிலையில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு சிறப்பு டெங்கு ஒழிப்பு திட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களை அகற்றுதல், பொது விழிப்புணர்வு மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த பிரசாரம் மே 19 முதல் மே 24 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.