நெவில் சில்வாவுக்குப் பிணை

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான (ASP) நெவில் சில்வாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிகமையில் 2023 ஆம் ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கிற்காக மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று சரணடைந்தார்.
நெவில் சில்வா இந்த வழக்கின் 9 ஆவது சந்தேக நபர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.