சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழிமூலம் இசைக்கப்பட்ட தேசிய கீதம்
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.