கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கூறி – ஒருவர் கைது

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1.49 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (9) கைது செய்யப்பட்டார்.
இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பலரிடமிருந்து பணம் பெற்றுள்ளார்.
குறித்த நபரிடம் பணம் கொடுத்த சுமார் 10 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்நிலையில் பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்தைத் தொடர்ந்து சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.