வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கத்தின் விலை

வரலாற்றில் முதன் முறையாக உலக சந்தையில் தங்கத்தின் விலை 3,950 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.
இதன்படி, கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தங்கத்தின் விலை 8,000 ரூபா அதிகரித்துள்ளது.
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 22 கரட் பவுண் தங்கத்தின் விலை 290,500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது கடந்த வௌ்ளிக்கிழமை 283,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.
இதனிடையே, கடந்த வாரம் 306,000 ரூபாவாக இருந்த 24 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று 314,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.