உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க ஐ.தே.க மற்றும் ஐ.ம.ச இடையே இணக்கம்

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஏனைய எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கு இடையே எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை
இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உடன்படிக்கை எட்டப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரல,கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன,
சாகல ரத்நாயக்க, மற்றும் ருவான் விஜேவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதற்கான கூட்டு அறிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மண்டும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல ஆகியோர் கையெழுத்திட்டனர்.