பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று மாலை 4:00 மணி முதல் நாளை அதிகாலை 4:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பாதுக்க, களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அகலவத்தை, வலல்லாவிட்ட, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும்
கண்டி மாவட்டத்தில் கங்கா இஹல கோரள, கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, யட்டியாந்தொட மற்றும் தெஹியோவிட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தில், குருவிட்ட, எஹலியகொட, பெல்மடுல்ல, எலபாத, கலவான, நிவித்திகல, அயகம மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )