பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு

பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பு

பஞ்சாப் பொற்கோவிலில் வான்பாதுகாப்பு அமைப்பினை அமைக்க கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

பொற்கோவிலை இலக்காக கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தலாம் என கோவில் நிர்வாகத்திடம் இராணுவம் கூறியதைத்
தொடர்ந்து வான்பாதுகாப்பு அமைப்பை கோவில் வளாகத்தில் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக இந்திய இராணுவத்தின் வான்பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோவில் நிர்வாகத்தின் அனுமதியை தொடர்ந்து வான்பாதுகாப்பு அமைப்பு, ட்ரோன்களை வீழ்த்த பாதுகாப்புப்படையினரும் பொற்கோவிலில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப்பின் அமிர்தசரசில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலை இலக்கு வைத்தும் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டது.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This