ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பி வைக்க உதவிக்கரம் நீட்டிய இந்தியா

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக ஈரானில் உள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று சனிக்கிழமை (21) இந்த அறிக்கையை வெளியிட்டது.
தற்போது ஈரானில் உள்ள எந்தவொரு இலங்கையரும் வெளியேற விரும்பினால், உத்தியோகப்பூர்வ டெலிகிராம் தளம் அல்லது பின்வரும் தொலைபேசி எண்கள்
ஊடாக ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+98 901 014 4557 , +98 912 810 9115, +98 912 810 9109
மேலும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி ஈரானில் உள்ள இலங்கை தூதரகத்தைத் தொடர்புகொள்வதன் ஊடாகவும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
+98 939 205 5161, +98 991 205 7522, +98 936 636 0260
இதேவேளை, ஈரானில் உள்ள நேபாளம் நாட்டைச் சேர்ந்தோருக்கும் இந்தியா இதே உதவியை வழங்குகிறது.
‘ஆபரேஷன் இண்டஸ்’ திட்டத்தின் கீழ் இரு அண்டை நாடுகளிலிருந்தும் குடிமக்களை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.