அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​விப்பு

அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​விப்பு

அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரி​வி​திப்​பின் காரண​மாக நாளை முதல் அமெரிக்கா​வுக்​கான பல தபால் சேவையை தற்​காலிக​மாக ரத்து செய்​வ​தாக இந்​தியா அறி​வித்​துள்​ளது.

ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதற்கு எதிர்ப்பு தெரி​வித்​து, ஒகஸ்ட் மாதத் தொடக்​கத்​தில் இந்​தி​யா​வுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்​தது.

இதுத​விர, தற்​போது தபால் சேவைக்​கான சுங்க கட்​ட​ணத்​தி​லும் அமெரிக்கா மாற்​றம் மேற்கொண்டுள்ளது.

அதாவது இந்​தி​யா​வில் இருந்து வெளி​நாடு​களுக்கு செல்​லும் பொதிகளுக்கு இது​வரை விலக்கு அளிக்​கப்​பட்டு வந்​தது. தற்​போது சுங்​கக்​கட்​ட​ணம் செலுத்த வேண்​டிய நிலை உரு​வாகி உள்​ளது.

அமெரிக்கா விதித்​துள்ள 50 சதவீத வரிவ​ிதிப்பு காரண​மாக இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்கு தபால்​களை எடுத்​துச் செல்​வ​தில் கட்​ட​ணக் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது.

எந்த அளவுக்கு கட்​ட​ணங்​களை அறிவிடுவது என்​ப​தில் ஏற்​பட்​டுள்ள குழப்​பம் காரணமாக தபால்​களை ஏற்க அமெரிக்கா​வுக்கு விமானங்​களை
இயக்​கும் விமான நிறு​வனங்​கள் மறுத்து வரு​கின்​றன.

இதனையடுத்து ஒகஸ்ட் 25 ஆம் திகதி முதல் அமெரிக்கா​வுக்​கான பெரும்​பாலான தபால் சேவை​களை தற்​காலிக​மாக இந்​தியா நிறுத்​தி​யுள்​ளது.

மேலும் 800 அமெரிக்க டொலர் வரை மதிப்​புள்ள பொருட்​களுக்கு இது​வரை வரி விலக்கு அளிக்​கப்​பட்ட நிலை​யில் தற்போது ரத்து செய்யப்படுவதாக
அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா​வுக்கு அனுப்​பப்​படும் அனைத்து சர்​வ​தேச அஞ்​சல் பொருள்​களும் அவற்​றின் மதிப்​பைப் பொருட்​படுத்​தாமல் சர்​வ​தேச அவசர பொருளா​தார ஆற்​றல் சட்​டத்​தின்​படி சுங்​கக் கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் 100 அமெரிக்க டொலர் வரை​யுள்ள பரிசுப் ​பொருள்​களுக்கு மட்​டும் வரி​விலக்கு அளிக்​கப்​படும். ஏனை பொருட்களுக்கு வரியை வசூலித்த பிறகே அஞ்​சல் அனுப்ப வேண்​டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கடிதங்​கள், ஆவணங்​கள் மற்​றும் சுமார் 9,000 ரூபா (100 டாலர்) மதிப்​புள்ள பரிசுப் பொருட்​களைத் தவிர்த்​து, இந்​தி​யா​விலிருந்து அமெரிக்கா​வுக்​கான அனைத்து வகை​யான பார்​சல்​களும் நிறுத்தி வைக்​கப்​படு​கின்​றன.

ஏற்​கனவே பொதிகளை அனுப்ப பதிவு செய்​தவர்​கள், தபால் கட்​ட​ணத்தை திரும்​பப் பெற்​றுக் கொள்​ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்​கை​யாளர்​களுக்கு ஏற்​பட்​டுள்ள இந்த சிரமம் தொடர்பில் தபால் துறை கவலை வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா​வுக்​கான முழு சேவை​களை​யும் விரை​வில் மீண்​டும் தொடங்க அனைத்து சாத்​தி​ய​மான நடவடிக்​கைகளும் மேற்​கொள்​ளப்​படும் எனவும் தெரிவிக்​கப் பட்​டுள்​ளது.

இதேவேளை, ஆஸ்​திரி​யா, பிரான்​ஸ், பெல்​ஜி​யம் உள்​ளிட்ட நாடு​களும் அமெரிக்கா​வுக்​கான தபால் பொதி சேவையை தற்​காலிக​மாக நிறுத்​தி​யுள்​ள​தாகத்​ தகவல்​கள்​ வெளி​யாகியுள்​ளன.

Share This