இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கை சிறைச்சாலைகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறை வழிமுறைகள் இல்லாததால் காரணமாக சிறைச்சாலை இறப்புகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவால் வெளியிடப்பட்ட ‘இலங்கையில் கைதிகளின் நிலைமை’ 2025 ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி முதல் நவம்பர் 2024 வரை இலங்கை சிறைகளில் குறைந்தது 168 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 155 பேர் நோய்களாலும், ஒன்பது பேர் தற்கொலையாலும், இரண்டு பேர் சிறைச்சாலைகளில் தாக்குதல்களாலும், இரண்டு பேர் சிறைச்சாலைகளில் விபத்துகளாலும் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆண்டு (2025) மார்ச் முதல் மே வரையிலான இரண்டு மாத காலத்தில் ஐந்து சிறைச்சாலை மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் பராமரிப்பு வசதிகளில் கடுமையான பலவீனம் இருப்பதாகவும், பெரும்பாலான இறப்புகள் புறக்கணிக்கப்பட்ட மருத்துவ நிலைமைகள் மற்றும் போதுமான மருத்துவ தலையீடு இல்லாததால் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், கைதிகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை வலுக்கட்டாயமாக உட்கொள்வதும், அடிப்படை மருத்துவ சேவையை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதும் இந்த நிலைமையை தீவிரமாக அதிகரிக்க வழிவகுத்துள்ளதாக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

சமீப காலங்களில் சிறைச்சாலைகளில் நடந்த தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் இந்தத் தோல்வியை மேலும் நிரூபிக்கின்றன என்றும், மார்ச் 19, 2025 அன்று, மகசின் சிறையில் 54 வயது கைதி ஒருவர் உப்பு நீரை வலுக்கட்டாயமாக குடிக்க வைக்கப்பட்ட பின்னர் இறந்தார் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This