லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி
![லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி லசந்த விக்ரமதுங்க படுகொலை – நீதியை நிலைநாட்டுவதாக அரசாங்கம் உறுதி](https://oruvan.com/wp-content/uploads/2025/02/pm-HARINI.jpg)
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவத்திற்கான நீதியை உறுதி செய்ய அரசாங்கம் அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த பிரதமர்,
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக அவரது மகள் அஹிம்சா அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளது. தேவையேற்படுமாயின், லசந்த விக்ரமதுங்கவில் படுகொலை சம்பவம் தொடர்பில் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படும்
எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. லசந்த விக்கிரமசிங்கேவின் கொலைக்கு நீதி வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
கடந்த காலங்களிலும் எங்கள் நிலைப்பாடு அதுதான். இன்றும் எங்கள் நிலைப்பாடு அதுதான். இந்த விடயத்தில் நீதி வழங்க நாங்கள் முடிந்த அனைத்தையும்
செய்வோம் என்று நான் அவருக்கு உறுதியளிக்கிறேன்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் விரிவாக கலந்துரையாடியுள்ளோம். இந்த விடயத்தை நிவர்த்தி செய்ய முழு நாள் நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவதற்கும் தயாராக உள்ளோம். ஏனெனில் அதன் தீவிரத்தன்மையை நாம் உணர்கிறோம்
சட்டமா அதிபர் துறை மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள், நல்ல நோக்கங்களைக் கொண்ட அதிகாரிகள் இருந்தாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வேலை முறைக்கு பழகிவிட்டனர், அவர்கள் ஒரு குறிப்பிட்ட கலாச்சாரத்திற்குள் பணியாற்றியுள்ளனர். அந்த முறை மாற்றப்பட வேண்டும் அதற்கு சில காலம் எடுக்கும்.ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் பதில்களுக்காக எவ்வளவு காலமும் காத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல” என்றார்.