
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு
வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நோயாளர்களின் நலன் கருதி மகப்பேறு, சிறுவர், மஹரகம அபேக்ஷா மற்றும் முப்படை வைத்தியசாலைகளில் வழமை போன்று சேவைகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் முறையான தீர்வு வழங்காவிடின், எதிர்காலத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி, வைத்தியர்கள் என்ற ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்குச் செல்ல முடியாது என்று தான் நினைப்பதாகவும், அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அதற்கு செவிசாய்க்க அமைச்சு தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
