தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

தமிழகத்தில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதன்படி, 22 கரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 560 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பு, அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்துள்ளது.
இதன்படி, சென்னையில் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 70 ரூபா உயர்வடைந்து ஒரு கிராம் 10,360 ரூபாவுக்கும் பவுன் ஒன்றுக்கு 560 ரூபா உயர்வடைந்து ஒரு பவுன் தங்கம் 82,880 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கரட் தங்கம் பவுன் ஒன்றுக்கு 90,416 ரூபா விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 18 கரட் தங்கம் பவுனுக்கு 68,640 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.