கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு வருகை

கீதா கோபிநாத் இன்று நாட்டிற்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிற்கு வருகைத் தருகிறார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தில் பணிபுரியும் துணை நிர்வாக இயக்குநர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதன் முறையாகும்.

இலங்கை மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள “இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது : கடன் மற்றும் ஆளுகை” எனும் மாநாட்டில் நாளையதினம் சிறப்பு விருந்தினராகவும் அவர் கலந்து கொள்கிறார்.

இலங்கையின் பொருளாதார நிலைமைகள், IMF இன் நிதி உதவி திட்டங்கள், மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான சீர்திருத்தங்கள் குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது, கீதா கோபிநாத் இலங்கை அரசாங்க அதிகாரிகள், மத்திய வங்கி ஆளுநர், மற்றும் பிற பங்குதாரர்களை சந்தித்து IMF இன் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி மற்றும் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த முன்னேற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This