இரட்டைக் கொலை சம்பவம் – அறுவருக்கு மரண தண்டனை

இரட்டைக் கொலை சம்பவம் – அறுவருக்கு மரண தண்டனை

நாட்டில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் அறுவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மேல் நீதிமன்றத்தால் இன்று திங்கட்கிழமை (10) இந்த தீர்ப்பளிக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறுவரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவர் மீது தாக்குதல் மேற்கொண்டு, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த அறுவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Share This