ரயில்களில் வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது!

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு வியாபாராமும் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரயிலில் வியாபாராம் செய்வதற்கு ரயில்வே பொது மேலாளரிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.
ரயில் பயணிகளை துன்புறுத்தும் வகையில் வியாபாராத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 11 சந்தேக நபர்களுக்கு எதிராக இலங்கை ரயில்வே துறையால் தாக்கல் செய்யப்பட்ட 11 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, நீதவான் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனிடையே, குற்றம் சாட்டப்பட்ட ஏழு சந்தேக நபர்களுக்கும் தலா 2,000 ரூபா அபராதம் விதித்த நீதவான், நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நான்கு சந்தேக நபர்களுக்கும் பிடியாணை பிறப்பித்தார்.
