அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தம்

நாடளாவியரீதியில் நாளை புதன்கிழமை முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்த பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.