அஸ்வெசும கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில் வைப்பு

அஸ்வெசும நிவாரணங்களைப் பெறும் குடும்பங்களிலுள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொடுப்பனவுகள் இன்று புதன்கிழமை அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
பயனாளர்கள் இன்று முதல் தங்கள் வங்கிக் கணக்குகள் மூலம் கொடுப்பனவுகளைப் பெற முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, 592,566 பயனாளர்களுக்கான 2,963 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.