சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை சாமர சம்பத் தசநாயக்கவை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் தசநாயக்க முன்னிலையான போது அவர் 03 குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டார்.
ஊவா மாகாண முதலமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
அவற்றில் முதல் இரண்டு வழக்குகளுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் மற்றுமொரு வழக்கிற்காக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த போது அரச வங்கியொன்றிலிருந்து நிதி கோரிய நிலையில் அதனை வழங்குவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்ததால் மாகாண சபை, குறித்த வங்கியில் நடத்திச்சென்ற அனைத்து நிலையான வங்கிக்கணக்குகளையும் நீக்கிக்கொண்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 23 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.