Category: இலங்கை
அமெரிக்காவால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை
அமெரிக்காவினால் இலங்கை மீது விதிக்கப்பட்ட தீர்வை வரி தொடர்பான கலந்துரையாடல் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. அமெரிக்காவின் வொஷிங்டனில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இதற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் ... Read More
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரையோரக் கடல் பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என கடல்சார் ... Read More
பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் சில ... Read More
கிளிநொச்சியில் நபரொருவரின் சடலம் மீட்பு
கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் கிளிநொச்சி ஜெயந்தி நகரைச் ... Read More
தஹாம் சிறிசேனவிற்கு நாமல் எம்.பி அழைப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவை எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடன் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ... Read More
சஜித் வழங்கிய பதவியை ஏற்க மறுத்தார் இம்தியாஸ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மார்கர், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை மீண்டும் ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து ... Read More
உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் சிக்கல்
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற கூடுதல் உறுப்பினர் பதவிகளுக்கு பெயர்களை (போனஸ்) தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, உள்ளூராட்சி மன்ற தொடக்கக் கூட்டங்களைக் கூட்டுவதில் நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளன. ... Read More
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை
உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளரும் இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரிகொட தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான கட்சியின் மாற்றப்பட்ட அளவுகோல்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா ... Read More
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் பலி
திருகோணமலை , கோமரங்கடவெல – திக்கட்டுவ பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 8 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை (24.05.205) இடம்பெற்றுள்ளது. சிறுவன் தனது தந்தையுடன் மோட்டார் ... Read More
மறைந்த நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த இறுதி அஞ்சலி
மறைந்த பிரபல நடிகை மாலினி பொன்சேகாவுக்கு முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபய ராஜபக்ச ஆகியோர் இன்று (25) தங்களது இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கணி மண்டபத்தில், மாலினி ... Read More
பெருமளவான மருந்து தொகையுடன் பெண் ஒருவர் கைது
சிலாபம் பகுதியில் அதிகளவான மருந்துகளை வைத்திருந்த 29 வயது பெண் ஒருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம்-புத்தளம் பிரதான வீதியில் உள்ள தெதுரு-ஓயா வீதிக்கு அருகிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் அந்த பெண் ... Read More












